தீபாவளி தினத்தில் வீடுடைத்து திருட்டு!


மட்டு ஏறாவூர் பிரதேசத்தில் தீபாவளிக்கு வீட்டை பூட்டிவிட்டு ஆலயத்திற்கு சென்று வீடு திரும்பியவர்களுக்கு வீடுடைத்து கொள்ளியிடப்பட்ட சம்பவம் அதிச்சியினை ஏற்படுத்தியுள்ளது.

ஆலயத்திற்கு சென்றவரின் வீடு உடைத்து கொள்ளையர்கள் உடைத்து அங்கிருந்த பணம் மற்றும் தங்க ஆபரணங்கள் உட்பட 28 இலட்சம்ரூபா பெறுமதியானவற்றை கொள்ளையிட்டப்பட்டுள்ளது.

இந்த கொள்ளை சம்பவம் நேற்று ஏறாவூர் மைலம்பாவெளி பிரதேசத்தில் இடம் பெற்றுள்ளதாக ஏறாவூர் பொலிசார் தெரிவித்தனர்.

சம்பவதினமான நேற்று தீபாவளி தினத்தையிட்டு காலை 11.00 மணியளவில் வீட்டை பூட்டிவிட்டு பிள்ளைகளுடன் கோவிலுக்கு சென்று வழிபட்டுவிட்டு மதியம் 1 மணியளவில் வீடுதிரும்பிய போது வீட்டின் உரிமையாளர் பூட்டியிருந்த வீட்டின் முன்கதவு மற்றும் அறை கதவு உடைத்து கொள்ளையிடப்பட்டிருந்தது.

கொள்லையர்கள் வீட்டின் அறையில் இருந்த அலுமாரியை உடைத்து அங்கிருந்த 6 இலட்சம் ரூபா பணம் மற்றும் 22 இலச்சம் ரூபா பெறுமதியான தங்க ஆபரணங்கள் கொள்ளையிட்டு சென்றதாக உரிமையாளர் பொலிசாருக்கு தெரிவித்தார்.

இதனையடுத்து குறித்த கொள்ளைச்சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணைகளை மேற்கொண்டுவருவதாக பொலிசர் தெரிவித்துள்ளனர்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.