தென்னிலங்கையில் அமைச்சர் மீது தாக்குதல் முயற்சி!
அமைச்சர் ஒருவர் மீது இளைஞர்கள் குழு ஒன்று தாக்குதல் மேற்கொள்ள முயற்சித்துள்ளதாக கூறப்படுகின்றது. இந்த சம்பவம் காலி லப்புதுவ பிரதேசத்திலேயே இடம்பெற்றுள்ளது.
அமைச்சர் சென்ற வாகன தொடரணி லப்புதுவ சந்தையில் உள்ள முச்சக்கர வண்டி நிறுத்தப்பட்டிருக்கும் இடத்திற்கு அருகில் நிறுத்தப்பட்டுள்ளது.
இதன்போது அமைச்சர் அங்கிருந்த சில இளைஞர்களிடம் அமைச்சர் சாதாரணமாக பேச்சுக்கொடுத்தபோது , கோபமடைந்த இளைஞர்கள் அமைச்சரைத் தாக்க முயற்சித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து அச்சமடைந்த அமைச்சரின் சாரதி உடனடியாக வாகனத்தை அந்த இடத்தில் இருந்து எடுத்துச் சென்றுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka
கருத்துகள் இல்லை