இரு குழுக்களால் திருகோணமையில் பதற்ற நிலை!


திருகோணமலை - கந்தளாய், பளுகஸ்வெவ சந்தியில் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதல் வாள்வெட்டு சம்பவமாக மாறிய நிலையில் , சொத்துக்களுக்கும் தீவைக்கப்பட்டுள்ள சம்பவத்தால் அங்கு பதற்ற நிலைமை உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இச்சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றிருந்த நிலையில், வாள்வெட்டுக்கு இலக்கான நபர் பலத்த காயங்களுடன் கந்தளாய் ஆதார வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

சம்பவத்தில் அங்கிருந்த லொறி, பெட்டிகடை ஒன்று தீவைக்கப்பட்டதில் அவை சேதமடைந்துள்ளது.

இந்நிலையில் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் இருவரை கைது செய்து பொலிஸார் மேலுதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.