ஆரம்ப பிரிவு மாணவர்கள் இருவருக்கு வவுனியாவில் கொரோனா!!


 வவுனியா வடக்கு வலயத்தைச் சேர்ந்த பாடசாலை ஒன்றின் ஆரம்ப பிரிவு மாணவர்கள் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதன்படி வவுனியா வடக்கு வலயத்திற்குட்பட்ட புதுக்குளம் கனிஷ்ட வித்தியாலயத்தில் கல்வி கற்கும் தரம் 1 மற்றும் தரம் 5 மாணவர்களின் உடல் நிலையில் மாற்றம் ஏற்பட்டதையடுத்து அவர்களின் பெற்றோர் குறித்த இருவரையும் வவுனியா வைத்தியசாலைக்கு அழைத்து சென்று இன்று அன்டிஜன் பரிசோதனை மேற்கொண்டனர்.

இதன்போது ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு மாணவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன், மாணவர்களுடன் தொடர்புடையவர்களை இனங்காண சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளதாக மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.