போதை மாத்திரைகளுடன் வாழைச்சேனையில் கண்ணகிபுரத்தைச்சேர்ந்த நபர் கைது!!
இன்று 2021-11-16ம் திகதி செவ்வாய்க்கிழமை மாலை 07.15 மணியளவில் வாழைச்சேனை, கோழிக்கடை வீதியில் வைத்து 38 வயதுடைய கண்ணகிபுரத்தைச் சேர்ந்த நபரொருவர் 1000 போதை மாத்திரைகளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
மிக நீண்ட நாட்களாக வாழைச்சேனைப் பகுதியில் சூட்சமான முறையில் தச்சுத்தொழிலாளி போன்று காட்டிக்கொண்டு போதை மாத்திரைகளை விநியோகித்து வந்துள்ளமை முதற்கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
காகித ஆலை இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசியத் தகவலுக்கமைய வாழைச்சேனை பொலிஸ் நிலைய விஷேட பிரிவினரோடு இணைந்து மேற்கொண்ட மிக நீண்ட நேரப்பிரயத்தனத்துக்கு பின்னர் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன், இவர் போதை மாத்திரைகளைக் கொண்டு வரப்பயன்படுத்திய துவிச்சக்கர வண்டியும் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட குறித்த நபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தத் தேவையான நடவடிக்கைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka
கருத்துகள் இல்லை