யாழ்.வீராங்கனைகள் தேசிய அணியில்!!

 


இலங்கை 21 வயது மகளிர் கிரிக்கெட் தேசிய 20 பேர் கொண்ட அணியில், யாழ்ப்பாண வீராங்கனைகள் இருவர் இடம்பிடித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதேவேளை, மகாஜனக் கல்லூரியின் முன்னாள் மாணவியும் (2019 A/L) ஶ்ரீஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் விளையாட்டு விஞ்ஞானமும் முகாமைத்துவமும் கற்கைநெறியின் முதலாம் வருட மாணவியுமான சானு பாஸ்கரன் இடம்பெற்றுள்ளார்.

மேலும், இவருடன் யா/ஸ்கந்தவரோதயக் கல்லூரியின் பழைய மாணவி மதுரிகா முரளிதாசனும் தெரிவாகியுள்ளார். சானு பாஸ்கரன் (Shanu Baskaran) கடந்த வருடம் இலங்கை மகளிர் உதைபந்தாட்ட தேசிய அணியிலும் தெரிவாகி தெற்காசிய உதைபந்தாட்ட வெற்றிக்கிண்ண போட்டியிலும் பங்குபற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, 2019 இல் யா/மகாஜனக் கல்லூரி 20 வயது பெண்கள் உதைபந்தாட்ட அணி தேசியமட்ட சாம்பியனாகிய போது சானு பாஸ்கரன் விளையாடினார் என்பதுடன் இறுதிப்போட்டியில் வெற்றிக்கோல் போட்டார் என்பதும் சிறப்பம்சம் ஆகும்.

இரு துறைகளிலும் தனது அபார திறமைகளை வெளிப்படுத்திவரும் சானு பாஸ்கரன் 2019 A/L பரீட்சையில் சிறந்த பெறுபேற்றை பெற்று, விளையாட்டு விஞ்ஞானமும் முகாமைத்துவமும் கற்கைநெறியை விரும்பி தெரிவுசெய்து, ஶ்ரீஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தில் முதலாம் வருட மாணவியாக பயின்று வருகின்றார்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.