மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வரிடம் விசாரணை!!

 


மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் தி.சரவணபவனிடம் நேற்று(வெள்ளிக்கிழமை) பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக தெரியவருகின்றது.

கடந்த 09-09-2021 சத்துருக்கொண்டான் நினைவுத்தூபியில் விளக்கேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டமை தொடர்பில் இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டதாக மாநகரசபை முதல்வர் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட சத்துருக்கொண்டான் மற்றும் அதனை அண்டிய பகுதிகளிலிருந்து இராணுவத்தினராலும் ஊர்காவல் படையினராலும் கொண்டுசெல்லப்பட்டு படுகொலைசெய்யப்பட்ட 186பேரின் நினைவாக சத்துருக்கொண்டானில் அமைக்கப்பட்டுள்ள நினைவுத்தூபியில் தான் அஞ்சலி செலுத்தியதாகவும் சிறு பிள்ளைகள், கர்ப்பிணி பெண்கள் உட்பட 186பேரின் நினைவாகவே இந்த நினைவுத்தூபியுள்ளதாகவும் அதனால் வருடாந்தம் அதில் அஞ்சலி செய்வதாகவும் பொலிஸாரிடம் தெரிவித்தாகவும் அவர் தெரிவித்தார்.

குறித்த படுகொலை தொடர்பில் யார் கொலையாளிகள் என்று சாட்சியங்கள் கூட பதிவுசெய்யப்பட்ட நிலையில் அது தொடர்பில் எந்த விசாரணைகளையும் முன்னெடுக்காத பொலிஸார் குறித்த நினைவுத்தூபியில் அஞ்சலி செலுத்தியமைக்காக விசாரணை செய்வதாகவும் தெரிவித்த முதல்வர் இது தொடர்பான தனது அதிருப்தியை பொலிஸாரிடம் தெரிவித்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.