திருமண பந்தத்தில் இணைந்துள்ளார் மலாலா யூசப்சையி!


மலாலா யூசப்சையி (malala Yousafzai) திருமண பந்தத்தில் இணைந்து கொண்டுள்ளார். மலாலா அசெர் மலிக் திருமண நிகழ்வு( நிக்கா) பேர்மிங்காமில் இடம்பெற்றுள்ளது.

தனது வாழ்வில் மிகவும் பெறுமதியான நாள் இது என மலாலா தெரிவித்துள்ளார். 2012 இல் தலிபான்களால் சுடப்பட்ட பின்னர் பாக்கிஸ்தானின் மகளிர் உரிமை செயற்பாட்டாளர் மலாலா மேற்கு மிட்லாண்டில் வசித்து வருகின்றார்.

வாழ்க்கையில் சகாக்களாகயிருப்பதற்காக அசெரும் நானும் திருமணபந்தத்தில் இணைந்துகொண்டோம் என மலாலா தனது டுவிட்டர் செய்தியில் தெரிவித்துள்ளார். குடும்பத்தவர்கள் கலந்துகொண்ட சிறிய நிக்கா நிகழ்வு குறித்த படங்களையும் அவர் வெளியிட்டுள்ளார்.

எங்களின் முன்னால் உள்ள பயணத்தில் ஒன்றாக இணைந்து பயணிப்பது குறித்து நாங்கள் மகிழ்ச்சியாகவுள்ளோம் என அவர் தெரிவித்துள்ளார்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.