பல நாடுகளுக்கு தடுப்பூசி ஏற்றுமதி செய்துள்ளது இந்தியா– மோடி


இந்தியா இந்த ஆண்டில் மாத்திரம் சுமார் 100 நாடுகளுக்கு தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்துள்ளதாக அறிவித்துள்ளது.

இதன்படி இதுவரை ஆறரை கோடி டோஸ்களுக்கும் அதிகமான தடுப்பூசிகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

பார்மசூட்டிகல்ஸ் துறையில் புதுமையான கண்டுப்பிடிப்புகள் என்ற தலைப்பில் நடத்த முதலாவது சர்வதேச மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், இந்திய மருத்துவதுறை உலக நாடுகளின் நம்பிக்கையை பெற்றுள்ளதன் காரணமாக இந்தியா உலகத்தின் பார்மஸி என அழைக்கப்படுவதாக தெரிவித்தார்.

அதேநேரம் இனி வரும் மாதங்களில் இந்தியாவின் தடுப்பூசி தயாரிப்புத் திறன் அதிகரிக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.