வான்பாயும் வவுனியா குளங்களைப் பார்வையிடும் மக்கள்!!
கடந்த சில நாட்களாக பெய்துவரும் கடும் மழை காரணமாக வவுனியாவில் வவுனியா பெரும்பாலான குளங்களில் வான் பாய்கிறது.
அந்தவகையில் வவுனியாகுளம், நொச்சிக்குளம், பத்தினியார் மகிழங்குளம், தாண்டிக்குளம், வைரவபுளியங்குளம், அரசமுறிப்புகுளம், பாவற்குளம், பேராறு நீர்த்தேக்கம் போன்ற பல்வேறு குளங்களில் வான் பாய்கின்றது.
வவுனியா குளத்தில் வான் பாய்வதனை அதிகளவான மக்கள் பார்வையிட்டு வருவதுடன் நீர்நிலைகளில் மீன்பிடித்தும் வருகின்றார்கள். அத்துடன் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் வவுனியா குளத்தடியில் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பதனையும் அவதானிக்க கூடியதாக இருக்கிறதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை