பிரபல ராப் இசைக்கலைஞர் மர்ம நபரால் சுட்டுக்கொலை!

 


அமெரிக்காவில் புகழ் பெற்றவர் ராப் இசைக்கலைஞர் யெங் டால்ப் (வயது36) மர்ம நபர்களால் சுட்டு கொல்லப்பட்டார் என தகவல் வெளியாகியுள்ளது. நேற்று முன்தினம் மதியம் தனது சொந்த ஊரான டென்னிசி மாகாணத்தின் மெம்பிஸ் நகர விமான நிலையத்துக்கு அருகில் உள்ள ஒரு கடையில் உணவுப் பொருட்கள் வாங்கிக் கொண்டிருந்த வேளையில் அவர் மர்ம நபரால் சுட்டுக்கொல்லப்பட்டார் என தகவல்கள் கூறுகின்றன.

இவர் யெங் டால்ப் உடல்நலமில்லாமல் இருக்கும் தனது உறவினரை பார்ப்பதற்காக அந்த நகருக்கு கடந்த திங்கட்கிழமையன்று வந்ததாக கூறப்படுகின்றது.

அதுமட்டுமின்றி கடந்த 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் இவரை சார்லட் நகரில் வைத்து சுட்டுக்கொல்ல முயற்சி நடந்தது. அதில் அவருடைய கார் சேதம் அடைந்தது. அதே ஆண்டின் செப்டம்பர் மாதம் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் சுட்டுக்கொல்ல நடந்த முயற்சியில் காயங்களுடன் தப்பினார்.

யெங் டால்ப் சுட்டுக்கொல்லப்பட்டிருப்பது, அமெரிக்காவில் தற்போது கடும் அதிர்வுகளை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்தாகும்.


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.