இறவாத நினவுகளவை - கவிதை!!
குண்டானோடை சட்டி பானை
கூழுக்கு ஒடியலுமாய்
ஒண்டும் தவறாமை
ஒழுங்கா தயார்படுத்தி
கொண்டு வந்து வைச்சிட்டு
கூட்டப்போவார் அப்பு அயலவையை..//
நிண்டு பாக்கமாட்டா
நீட்டான கலவாய் மீனை
துண்டாடிக் கொண்டு ஆச்சி
துரிதமா கூழ் காச்சி இறக்கிடுவா..//
நண்டு றால். மீனோடை
நாலைஞ்சு மரக்கறியள்
கூட்டி காச்சினதை
குடிக்க பிலாவிலை எடுப்பா..//
அப்பு அயல் வீடுகளை
அழைச்சு வந்து விட்டிட்டு
எடுத்தூத்தணை முட்ட முட்ட
எல்லாருக்கும் குடணை என்பார்..//
அப்பப்ப ஆச்சி அப்பு
தப்பாது சண்டை
அயலவை பிடிக்கப்போனா
அவைக்குடையும் மண்டை...//
மயிர் பிடிச்சு மத்தியானம்
மச்சாள்மார் அடிபாடு.
மறுநாள் மறந்திடுவினம்
மாறிமாறி பேன் எடுப்பினம்..//
அக்காளுக்கு வருத்தமெண்டா
அவளைச்சுத்தி சகோதரங்கள்
எப்பனும் விலகாயினம்.
எழும்புமட்டும் சாப்பிடாயினம்.
அடிபாடு. கிளிபாடு
அடிக்கடி ஊருக்கை.
அடுத்த ஊரார் கை வைச்சா
அடிக்க ஊரே ஒண்டா நிக்கும்..//
இப்பிடித்தான் அப்ப
இருந்தது கிரா வாழ்க்கை.
இனிமேல் நடக்காதவை
#இறவாத நினவுகளவை..//
தனம் பாலசிங்கம்
கருத்துகள் இல்லை