பருவநிலை மாற்ற விவகாரம் -- அமெரிக்கா மற்றும் சீனாவின் இணைந்த முடிவு!!

 


எதிர்வரும் பத்து ஆண்டுகளுக்கு பருவநிலை மாற்ற பிரச்சினை தொடர்பான தீர்வு நடவடிக்கைகளில், சீனாவும் அமெரிக்காவும் இணைந்து செயற்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

க்ளாஸ்கோவில் நடைபெற்று வரும் COP26 பருவநிலை மாநாட்டில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

சமீப காலமாக சீனா மற்றும் அமெரிக்கா இடையே பதற்ற நிலை நிலவி வருகின்ற நிலையில், இந்த அரிய உறுதிப்பாட்டு கூட்டு அறிவிப்பினை உலக நாடுகள் வரவேற்றுள்ளன.

இதில், பரிஸ் ஒப்பந்தத்தில் 1.5 செல்சியஸ் வெப்பநிலை என்ற இலக்கை நோக்கி இருநாடும் இணைந்து செயற்படும் என்று வழங்கிய உறுதிப்பாட்டை மீண்டும் நினைவுகூர்வதாக தெரிவித்துள்ளன.

அதேபோன்று இந்த இலக்கை அடைய இருநாட்டிற்கு இடையே இருக்கும் இடைவெளியை குறைப்பதற்கான நடவடிக்கைகளில் இருநாடும் ஈடுபடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

2015ஆம் ஆண்டு பரிஸில், உலகின் வெப்பநிலை 1.5 செல்சியஸிலிருந்து 2 செல்சியஸ் வரை அதிகரிக்காமல் இருப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்போம் என உலக தலைவர்கள் உறுதியளித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.