அமெரிக்காவை எச்சரித்தது எதியோப்பியா
நாடு குறித்த தவறான தகவல் பரப்புவதை அமெரிக்க நிறுத்த வேண்டும் என எதியோப்பிய அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.
தீவிரவாத தாக்குதல் நடத்தப்படக்கூடும் என அமெரிக்க இராஜாங்க திணைக்களம் வெளியிட்ட அறிக்கையினை அடுத்தே இந்த கருத்தை எதியோப்பியா வெளியிட்டுள்ளது.நாட்டின் வட பகுதியான டிக்ரேயில் ஒரு வருடத்திற்கும் மேலாக அரசாங்கத்திற்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டு வருகின்றது.
இந்த மோதல்களினால் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளதுடன் மில்லியன் கணக்கானோர் இடம்பெயர்ந்துள்ளனர்.
ஆபிரிக்க கண்டத்தில் அதிக சனத்தொகை கொண்ட நாடு எதியோப்பியா என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டின் மோதல்கள் குறித்து பிழையான தகவல்களை சில மேற்குலக சக்திகள் பரப்பி வருவதாகவும் எதியோப்பிய பிரதமர் தெரிவித்துள்ளார்.
எதியோப்பியால் தீவிரவாத தாக்குதல் நடத்தப்படக்கூடும் என்பதால் மக்கள் விழிப்புடன் இருக்குமாறு செவ்வாய் அன்று அமெரிக்க இராஜாங்க திணைக்களம் அறிக்கை வெளியிட்டிருந்தது.
டிக்ரேயில் நிலவும் மோதல் நிலை காரணமாக 400000 பேர் வறுமையால் வாடுவதாக ஐக்கிய நாடுகள் அண்மையில் குறிப்பிட்டிருந்தது.அண்டை பகுதியான அபாரிலிருந்து உணவுப் பொருட்கள் உள்ளிட்ட நிவாரணப்பொருட்களை ஏற்றிய 40 ட்ரக் வண்டிகள் ட்க்ரே பகுதிக்கு பயணித்துள்ளன.
அங்கு தேவையான மனிதாபிமான தேவைகளை பூர்த்தி செய்வதற்காக தினமும் 100 ட்ரக் வண்டிகளேனும் இவ்வாறு ட்க்ரே நோக்கிசெல்வதாக ஐநா குறிப்பிட்டுள்ளது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை