யாழில் பெற்றோல் குண்டு வீச்சு!

 


யாழ்ப்பாணம் அரியாலை பகுதியில் உள்ள வீடொன்றின் மீது பெற்றோல் குண்டு தாக்குதலை மேற்கொள்ளுமாறு வெளிநாட்டில் இருந்து , தமக்கு 30 ஆயிரம் ரூபாய் பணம் வழங்கப்பட்டதாக, சம்பவம் தொடர்பில் கைதானவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த மாதம் 10ஆம் திகதி யாழ்ப்பாணம் அரியாலை பகுதியில் உள்ள வீடொன்றின் மீது பெற்றோல் குண்டு தாக்குதல் நடத்தப்பட்டது.

குறித்த சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதை அடுத்து , விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் CCTV காட்சிகளின் அடிப்படையில் , உடுவில் மற்றும் சாவகச்சேரி பகுதியை சேர்ந்த 18 மற்றும் 22 வயதுடைய இரு இளைஞர்களை கைது செய்துள்ளனர்.

இதனையடுத்து அவர்களிடம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்ட போது , தாமே தாக்குதலை மேற்கொண்டதாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்ததுடன் , தாக்குதல் நடத்த வெளிநாட்டில் இருந்து 30 ஆயிரம் ரூபாய் பணம் தமக்கு வழங்கப்பட்டதாக அவர்கள் தெரிவித்தாக பொலிஸார் கூறியுள்ளனர்.

இந்நிலையில் கைதான நபர்களுக்கு , யாழில் இடம்பெற்ற பல்வேறு தாக்குதல் சம்பவங்களுடன் தொடர்பிருக்கா என பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.