மீண்டும் பைஸர் தடுப்பூசிகள் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டன!


இலங்கைக்கு மேலுமொரு தொகை பைஸர் தடுப்பூசிகள் இன்று (திங்கட்கிழமை) காலை கொண்டுவரப்பட்டுள்ளன.

அதன்படி, அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தினால் கொள்வனவு செய்யப்பட்ட 15 இலட்சம் பைஸர் தடுப்பூசிகள் நாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன.

இந்த தடுப்பூசிகள் நெதர்லாந்தில் இருந்து டுபாய் ஊடாக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு இன்று அதிகாலை கொண்டுவரப்பட்டுள்ளன.

அத்துடன் குறித்த தடுப்பூசிகள் தற்போது இலங்கை மருந்தாக்கல் கூட்டுதாபனத்தினால் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.