சுமந்திரனை இனி கனடா வர வேண்டாம் என கூறிய புலம் பெயர் தமிழர்கள்!!
கனடாவிற்கான விஜயம் ஒன்றை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற பேச்சாளரான எம்.ஏ சுமந்திரன் மற்றும், நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் மேற்கொண்டுள்ளனர்.
கனடாவில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற பேச்சாளர் எம்.ஏ. சுமந்திரன் (M.A.Sumanthiran) மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் (Rasamanickam Shanakkiyan) ஆகியோர் கலந்துகொண்ட நிலையில் அங்கு பெரும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த கூட்டத்தில் இருந்து வேகம் வேகமாக எம்.ஏ.சுமந்திரன் மற்றும் சாணக்கியன் வெளியேறி சென்றனர்.
மேலும் இந்த கூட்டத்தில் இருந்து வெளியேறிய போது புலபெயர்ந்த தமிழர்கள் சுமந்திரனை பார்த்து இனி கனடாவிற்கு வர வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka
கருத்துகள் இல்லை