ஊவா மாகாண சாரதிகளுக்கான முக்கிய எச்சரிக்கை!
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக ஊவா மாகாணத்தின் பல பகுதிகள் காலை மற்றும் மாலை நேரங்களில் பனிமூட்டமாகக் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில், பதுளை – பசறை, மடுல்சிம, எகிரிய, எல்ல, வெலிமடை மற்றும் ஹப்புத்தளை ஆகிய வீதிகளில் அவதானத்துடன் வாகனங்களை செலுத்துமாறு வாகன சாரதிகளிடம் பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
குறித்த வீதிகளால் சூழப்பட்ட மலைகள் மண் சரிவுகளுக்கு உள்ளாகின்றதாகவும் , பாறைகள் மற்றும் மண் மேடுகளால் அடிக்கடி தடைபடுவதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka
கருத்துகள் இல்லை