ஒரேநாளில் 2 இலட்சத்துக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி!!
நாட்டில் ஃபைசர் பூஸ்டர் டோஸ், 2 இலட்சத்து 12 ஆயிரத்து 733 பேருக்கு நேற்று (புதன்கிழமை) செலுத்தப்பட்டுள்ளது.
அந்தவகையில் நேற்றைய தினம், 2 இலட்சத்து 19 ஆயிரத்து 997 பேருக்கு, கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் பிரிவு தெரிவித்துள்ளது.
இதன்படி 1,174 பேர், சினோபார்ம் தடுப்பூசியின் முதல் டோஸையும் 2 ஆயிரத்து 881 பேர் இரண்டாவது சினோபார்ம் டோஸையும் பெற்றுக்கொண்டுள்ளனர்.
அதேபோன்று 1,209 பேர், ஃபைசர் தடுப்பூசியின் முதல் டோஸையும் 2 ஆயிரம் பேர், இரண்டாவது ஃபைசர் டோஸையும் பெற்றுள்ளனர்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka
கருத்துகள் இல்லை