வவுனியாவில் விபத்து - மதகுரு ஒருவர் படுகாயம்

 


வவுனியா- குட்செட் வீதியில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை இடம்பெற்ற விபத்தில், மதகுரு ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.


மேலும் விபத்து தொடர்பாக தெரியவருவதாவது, வவுனியாவில் இருந்து குட்செட்வீதி நோக்கி வந்த மோட்டார் சைக்கிளும் குட்செட் பகுதியில் இருந்து நகர் நோக்கி பயணித்த முச்சக்கர வண்டியும் மோதிக்கொண்டதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.

இதில், மோட்டார் சைக்கிளில் பயணித்த திருகோணமலை சேர்ந்த கேதீஸ்வரன் (வயது 41) என்பவரே படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணையினை வவுனியா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.