”மாவீரன் கர்ணன் ” வாசகம் பொறித்த முச்சக்கர வண்டி உரிமையாளரிடம் விசாரணை!!

 


“மாவீரன் கர்ணன்” என்ற வாசகம் உள்ள ஸ்டிக்கரை தனது முச்சக்கர வண்டியின் பின் புறத்தில் ஒட்டியிருந்த  முல்லைத்தீவு புதுக்குடியிருப்பைச்  சேர்ந்த இரு இளைஞர்களை முல்லைத்தீவு காவல்துறையினர் விசாரணைக்கு உட்படுத்தியுள்ளனர்.

முன்னதாக மாவீரன்  என்ற சொல் பதிக்கப்பட்டிருப்பதற்காகவே வாக்குமூலம் ஒன்றை பெற்றுக்கொள்ள முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்திற்கு முச்சக்கர வண்டியோடு வருகைதருமாறு சகோதரர்களான புதுக்குடியிருப்பு ஆனந்தபுரம் பகுதியை சேர்ந்த தர்மராசா பிந்துசன் (வயது 21) மற்றும் தர்மராசா கனிஸ்ரன் (வயது 19 ) ஆகியோரை முல்லைத்தீவு காவல்துறையினர் அழைத்திருந்தனர்.

இந்நிலையில், ஊடகங்களுக்கும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ் பிராந்திய அலுவலகத்துக்கும்  குறித்த சம்பவம் தொடர்பில் பாதிக்கப் பட்டவர்களால் உடனடியாக  தொலைபேசி மூலம் முறைப்பாடு செய்யப்பட்டது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.