சிறப்பாக வெற்றிபெற்றது சிட்னி தண்டர் அணி!

 


பிக் பேஷ் ரி-20 தொடரின் 24ஆவது லீக் போட்டியில், சிட்னி தண்டர் அணி 34 ஓட்டங்களால் சிறப்பான வெற்றியை பதிவுசெய்துள்ளது.

கன்பெர்ரா மைதானத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், சிட்னி தண்டர் அணியும் பெர்த் ஸ்கொர்சர்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின.

இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பெர்த் ஸ்கொர்சர்ஸ் அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய சிட்னி தண்டர் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 200 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, பிலிங்ஸ் 67 ஓட்டங்களையும் ஜேஸன் சங்கா ஆட்டமிழக்காது 56 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

பெர்த் ஸ்கொர்சர்ஸ் அணியின் பந்துவீச்சில், மெத்தியு கெலி 3 விக்கெட்டுகளையும் மிட்செல் மார்ஷ் 2 விக்கெட்டுகளையும் ஜேஸன் பெரென்டோர்ப் மற்றும் ஹென்ரிவ் டை ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து 201 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய பெர்த் ஸ்கொர்சர்ஸ் அணியால், 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 166 ஓட்டங்களை மட்டுமே பெற முடிந்தது. இதனால், சிட்னி தண்டர் அணி 34 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.

இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, கொலின் முன்ரோ ஆட்டமிழக்காது 64 ஓட்டங்களையும் ஹென்ரிவ் டை 44 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

சிட்னி தண்டர் அணியின் பந்துவீச்சில், நதன் மெக்ஹென்ரிவ் 3 விக்கெட்டுகளையும் சகீப் மசூத் மற்றும் கிறிஸ் கிறீன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் டேனியல் சேம்ஸ் 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.