மிருகங்களிற்கு பெயர் சூட்டும் வாய்ப்பு சிறுவர்களுக்கு கிடைக்கிறது!!


தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையின் பணிப்பாளரான ஷர்மிளா ராஜபக்ஷ அண்மையில் மிருகக்காட்சி சாலையில் பிறந்த ஐந்து விலங்குகளுக்கு பெயர் சூட்டுவதற்கு சிறுவர்களுக்குச் சந்தர்ப்பம் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

நீர் யானை, ஒரு அரேபிய ஓரிக்ஸ், இரண்டு குரங்குக் குட்டிகள் மற்றும் ஒரு கழுதைக்குட்டி ஆகியவையே அந்த இவ்வாறு பெயர் சூட்டப்படவேண்டியவை ஆகும்.

நத்தார் தினத்தன்று இவைகளுக்கு பெயர் சூட்டப்படும் என்பதால் டிசம்பர் 20ஆம் திகதிக்குள் பொருத்தமான பெயரைப் பரிந்துரைத்து அனுப்புமாறும் அவர் கேட்டுள்ளார்.

எனவே குட்டி விலங்குக்காக முன்மொழியப்பட்ட பெயர் அனுப்புபவரின் பெயர், வயது, பாடசாலை மற்றும் முகவரி ஆகியவற்றைக் குறிப்பிட்டு 070 698 8448 என்ற எண்ணுக்கு எஸ் . எம் . எஸ் அனுப்ப வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.