சீன நிறுவனம் இலங்கைக்கு எதிராக வழக்கு!!

 


சீனாவில் இருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட சேதனப் பசளையை சின்டாவே சீவின் பயோடெக் (Seawin biotech group) என்ற நிறுவனம் இறக்குமதி செய்தது.

ஆனால் இலங்கை அரசு இறக்குமதிக்காக வந்த சேதனப் பசளையில் குற்றம் இருப்பதாக கூறி திருப்பி அனுப்பியது. இந்த நிலையில் குறித்த நிறுவனம் இலங்கைக்கு எதிராக வழக்குத் தொடர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பாதிப்பை ஏற்படுத்தும் நுண்ணுயிர்கள் இருந்ததாக கூறி 49.3 மில்லியன் டொலர் கொடுக்கல், வாங்கல் கீழ் இருந்த பசளைகளை தாங்கிய கப்பல்களை திருப்பி அனுப்பி இலங்கை நிராகரித்துள்ளது. அதனையடுத்து குறித்த கப்பலானது சிங்கப்பூரை நோக்கி பயணித்துக் கொண்டிருப்பதுடன் கப்பல் சிங்கப்பூரை சென்றடைந்ததும் குறித்த சீன நிறுவனம் வழக்கு தொடர தீர்மானித்துள்ளது.

இந்த வழக்கானது சர்வதேச சமரச நீதிமன்றத்தில் தொடரப்படவுள்ளது. முன்னதாக சீனாவின் பசளை தொடர்பிலான வழக்கு இலங்கையில் நடைபெற்று வருகிறது. குறித்த வழக்கின் ஊடாக இலங்கை, தாவரங்களை தனிமைப்படுத்தும் சேவை அமைப்பிடம் 8 மில்லியன் டொலர்களை இழப்பீடாக கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.        


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.