இரண்டாவது இன்னிங்ஸில் தடுமாறியது இங்கிலாந்து!!


ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் மூன்றாவது டெஸ்ட் போட்டியின், இரண்டாம் நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்துள்ளது.

இதன்படி இரண்டாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிவரும் இங்கிலாந்து அணி, இன்றைய இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 31 ஓட்டங்களை பெற்றுள்ளது.

ஆட்டநேர முடிவில், ஜோ ரூட் 12 ஓட்டங்களுடனும் பென் ஸ்டோக்ஸ் 2 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காது களத்தில் இருந்தனர்.

இதற்கமைய அவுஸ்ரேலியக் கிரிக்கெட் அணியின் முதல் இன்னிங்ஸ் ஓட்டங்களுடன் ஒப்பிடுகையில், இங்கிலாந்து அணி 51 ஓட்டங்கள் பின்னிலையில் உள்ளது.

மெல்பேர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஆரம்பமான இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்ரேலியா அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்துக் கிரிக்கெட் அணி, 185 ஓட்டங்களுக்கு சுருண்டது.

இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, ஜோ ரூட் 50 ஓட்டங்களையும் ஜொனி பேர்ஸ்டொவ் 35 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

அவுஸ்ரேலியக்க கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், பெட் கம்மின்ஸ் மற்றும் நாதன் லியோன் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும் ஸ்டார்க் 2 விக்கெட்டுகளையும் போலண்ட் மற்றும் கிறீன் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து பதிலுக்கு முதல் இன்னிங்சை தொடங்கிய அவுஸ்ரேலியக் கிரிக்கெட் அணி, முதல் இன்னிங்ஸிற்காக 267 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, மார்கஸ் ஹரிஸ் 76 ஓட்டங்களையும் வோர்னர் 38 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

இங்கிலாந்துக் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், ஜேம்ஸ் எண்டர்சன் 4 விக்கெட்டுகளையும் ரொபின்சன் மற்றும் மார்க்வுட் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் ஸ்டோக்ஸ் மற்றும் ஜெக் லீச் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனையடுத்து 82 ஓட்டங்கள் பின்னிலையில் இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி இன்றைய இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 31 ஓட்டங்களை பெற்றுள்ளது.

இங்கிலாந்து அணி சார்பில், ஹசீப் அமீட் 7 ஓட்டங்களுடனும் ஸெக் கிரெவ்லி 5 ஓட்டங்களுடனும் டாவிட் மாலன் மற்றும் ஜெக் லீச் ஆகியோர் ஓட்டமெதுவும் பெறாத நிலையிலும் ஆட்டமிழந்தனர்.

அவுஸ்ரேலியக் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், மிட்செல் ஸ்டாக் மற்றும் ஸ்கொட் போலண்ட் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இன்னமும் 6 விக்கெட்டுகள் வசமுள்ள நிலையில், மூன்றாம் நாள் ஆட்டத்தை இங்கிலாந்து அணி, நாளை தொடரவுள்ளது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.