அதிர்ச்சியில் கோட்டாபய அரசாங்கம்!!

 


அமைச்சரவை தோல்வியடைந்துள்ளதால் முழு நாடும் பாதிக்கப்பட்டுள்ளது.நாட்டை நிர்வகிக்க முடியாவிடின் பாராளுமன்ற தேர்தலை நடத்துவது சிறந்ததாகும். தமக்கு தேவையான அரசாங்கத்தை தோற்றுவிக்க மக்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என கிராமிய கலை கலாசார அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்க தெரிவித்தார்.

பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வினை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அரசாங்கத்தின் மீது மக்கள் கொண்டுள்ள விரக்தி நிலை நாளுக்கு நாள் அதிகரித்த நிலையில் செல்கிறது.

தவறுகள் திருத்திக் கொள்ளப்படுவது அவசியமாகும். விவசாயத்துறை தொடர்பில் மாற்றுத்திட்டங்களை செயற்படுத்துவது அவசியமானதாகும். உணவு தட்டுப்பாடு ஏற்படும் என பொருளாதார நிபுணர்களின் எதிர்வு கூறல் குறித்து விவசாயத்துறை அமைச்சு அதிக கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் கூறினார்.

இவ் அறிவிப்பால் கோட்டாபய அரசாங்கம் அதிர்ச்சியில் உள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.