பாடகி யொஹானிக்கு இடம் ஒதுக்கிய அமைச்சரவை!


சர்வதேச ரீதியாக இலங்கைக்குப் புகழ் சேர்த்த மெனிக்கே பாடல் பாடகி யொஹானி டி சில்வாவை பாராட்ட வேண்டுமென பல்வேறு தரப்பினரும், நாடாளுமன்றத்தில் யோசனை முன்வைத்திருந்தனர்.

இந்த நிலையில், 9.68 பேர்ச்சர்ஸ் காணித்துண்டொன்றை யொஹானி டி சில்வாவுக்கு அரசாங்கத்தால் பரிசாக வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

புத்தசாசன, சமய அலுவல்கள் மற்றும் கலாசார விவகாரங்கள் அமைச்சரான பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ முன்வைத்த யோசனைக்கே அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அதற்கமைய, நகர அபிவிருத்தி அதிகாரசபைக்கு சொந்தமான பத்தரமுல்ல ரொபர்ட் குணவர்த்தன வீதியில் அமைந்துள்ள காணி , யொஹானி டி சில்வாவுக்கு வழங்கப்படவுள்ளது.

குறித்த காணை 1996 ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்தை வென்றெடுத்த இலங்கை கிரிக்கட் குழுவுக்கு 99 வருடகால குத்தகை அடிப்படையில் வழங்கப்பட்டுள்ள காணித்துண்டுகளுக்கு அருகாமையில் அமைந்துள்ள இடமாகும்.  

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.