ஆபத்தை எதிர்நோக்கவுள்ள இந்தியா!!

 


இந்தியாவில் ஜனவரி - பிப்ரவரி மாதங்களில் ஒமைக்ரான் தொற்று உச்சமடையும் என இந்திய சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது. எனினும் இதுகுறித்து பயப்படத் தேவையில்லை என்றும் , நோயின் தீவிரம் குறைவாகவே இருக்கும் என்றும் அவர்கள் கூறியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அதேவேளை டெல்டா வகை வைரசை விட ஒமைக்ரான் தொற்று வேகமாக பரவக்கூடிய தன்மையுடையது என்பதால் அதிகமானோர் பாதிக்கப்படும் ஆபத்து உள்ளது. இதுகுறித்து நடந்த மாதிரி ஆய்வுகளில், பெரும்பாலானோர் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டாலும், நோயினால் தீவிர உடல்நலக் குறைபாடு ஏற்படாது.

ஒமைக்ரான் பரவும் வேகம் தான் அதிகமே தவிர, பயப்படத் தேவையில்லை எனவும் அவர்கள் கூறுகின்றனர். இதேவேளை உலகளவில் இதுவரை 77 நாடுகள் தான் ஒமைக்ரான் பாதிப்பு உள்ளதை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ளன.

இந்நிலையில், உலகம் முழுவதுமே ஒமைக்ரான் பரவி உள்ளது என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. “ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்த போதிய நடவடிக்கைகள் தான் தேவை.டெல்டா வகை கொரோனா வைரஸ் தான் மிகவும் அபாயகரமானதாக இன்றளவும் கருதப்படுகிறது.

ஒமைக்ரானால், டெல்டா வகை பாதிப்பை போல மருத்துவம் மற்றும் சுகாதார அமைப்புகளுக்கு கடும் அழுத்தம் ஏற்படாது. இரண்டு டோஸ் தடுப்பூசியை செலுத்திக் கொள்வதை அதிகரிப்பதே முதல் நோக்கமாக உள்ளது.

அதன்மூலம், வயதானவர்கள் மற்றும் இணை நோய் உள்ளவர்களை தீவிர நோய் பாதிப்பிலிருந்து பாதுகாக்க முடியும் எனவும் இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.