ஜெயசீலி தொடர்பில் நீதவான் விடுத்த பணிப்புரை!!


கிளிநொச்சி ஜெயந்திநகரில் உயிரிழந்த 32 வயதான நிலகரட்ண ஜெயசீலியின் சடலத்தை உறவினர்களிடம் கையளிக்க கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி எஸ்.லெனின்குமார் பணித்துள்ளார்.

அதேவேளை சம்பவம் இடம்பெற்ற பகுதியை பார்வையிட்ட நீதவான் சம்பவம் தொடர்பான முழுமையான விசாரணைகளை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்குமாறு கிளிநொச்சி உதவி் பொலிஸ் அத்தியட்சகரை பணித்துள்ளார்.

இதேவேளை, உயிரிழந்தவரின் சடலத்தை அவரது தாயாரிடம் கையளிக்குமாறு நீதவான் பணித்துள்ள அதேவேளை , யுவதியின் மரணத்தில் ஏற்பட்டுள்ள சந்தேகம் காரணமாக சடலத்தை புதைக்குமாறும் கூறியுள்ளார்.

கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஜெயந்திநகர் பகுதியில் கடந்த (19) சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் மரணம் தொடர்பில் திடீர் மரண விசாரணை அதிகாரி சிங்கராசா ஜீவநாயகம் விசாரணை மேற்கொண்டிருந்த நிலையில், சடலம் பிசிஆர. பரிசோதனைக்குட்படுத்தப்பட்ட இன்று பிரேத பரிசோதனை இடம்பெற்றிருந்தது.

யுவதியின் மரணத்தில் விசாரணைகளில் சந்தேகம் எழுந்திருந்த நிலையில் நேற்றுமாலை சட்ட வைத்திய அதிகாரி ஆர்.தனுசன் சம்பவம் இடம்பெற்ற இடத்தை நேரில் சென்று பார்வையிட்டிருந்தார்.

சம்பவத்தில் வாடகை வீட்டில் வசித்து வந்த சிவில் பாதுகாப்பு திணைக்கள உத்தியோகத்தரான 32 வயதுடைய என்ற 03 பிள்ளைகளின் தாயாரே உயிரிழந்துள்ளார். ஆரம்பகட்ட விசாரணைகளில் பெண்ணின் மரணத்தில் பலத்த சந்தேகம் எழுந்திருந்தது.

இந்த நிலயைில் கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றம் உடற்கூற்று பரிசோதனையின் பின்னர் சடலத்தை உறவினர்களிடம் கையளிக்குமாறு மன்று கட்டளையிட்டிருந்தது.

இதனையடுத்து பெண்ணின் சடலம் அவரது தாயாரிடம் கையளிக்கப்படவுள்ளதுடன், இறுதி கிரியைகள் கெக்கிராவவில் அவர்களது பூர்வீக இடத்தில் இடம்பெறவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.