பிலிப் சோல்ட்டின் துணையுடன் கண்டியை வீழ்த்தியது தம்புள்ளை!


லங்கா பிரீமியர் லீக் ரி-20 தொடரின் இரண்டாவது லீக் போட்டியில், தம்புள்ளை ஜியண்ட்ஸ் அணி 20 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.

கொழும்பு. ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், தம்புள்ளை ஜியண்ட்ஸ் அணியும் கண்டி வோரியஸ் அணியும் மோதின.

இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற தம்புள்ளை ஜியண்ட்ஸ் அணி முதலில், துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய தம்புள்ளை ஜியண்ட்ஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 190 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, பிலிப் சோல்ட் 64 ஓட்டங்களையும் தசுன் சானக 24 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

கண்டி வோரியஸ் அணியின் பந்துவீச்சில், லஹிரு குமார 3 விக்கெட்டுகளையும் அல் அமீன் 2 விக்கெட்டுகளையும் சச்சிந்து கொலம்பகே மற்றும் ரொவ்மன் பவல் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து 191 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய கண்டி வோரியஸ் அணியால், 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 170 ஓட்டங்களை மட்டுமே பெற முடிந்தது. இதனால், தம்புள்ளை ஜியண்ட்ஸ் அணி 20 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.

இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, ரொவ்மன் பவல் 42 ஓட்டங்களையும் அஞ்சலோ பெரேரா 24 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

தம்புள்ளை ஜியண்ட்ஸ் அணியின் பந்துவீச்சில், நுவான் பிரதீப் மற்றும் ரமேஷ் மெண்டிஸ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும் இம்ரான் தாஹீர் மற்றும் தசுன் சானக ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக, 27 பந்துகளில் 5 சிக்ஸர்கள் 4 பவுண்ரிகள் அடங்களாக 64 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட பிலிப் சோல்ட் தெரிவுசெய்யப்பட்டார்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.