கஞ்சாவுடன் வியாபாரி ஒருவர் கைது


 மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள ஓட்டுமாவடியில் இராணுவ புலனாய்வு பிரிவினர் கஞ்சா வியாபாரி ஒருவரை 595 கிராம் கேரளா கஞ்சாவுடன் நேற்று (04) கைது செய்து ஒப்படைத்துள்ளதாக வாழைச்சேனை பொலிசார் தெரிவித்தனர்.


இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவல் ஒன்றிற்கமைய சம்பவதினமான நேற்று இரவு ஓட்டுமாவடி பகுதிக்கு கேரளா கஞ்சாவை எடுத்து சென்ற கஞ்சா வியாபாரியை இராணுவ புலனாய்வு பிரிவினர் பொலிசாருடன் இணைந்து கைது செய்ததுடன் அவரிடமிருந்து 595 கிராம் கேரளா கஞ்சாவை மீட்டனர்.

இதன்போது கைது செய்யப்பட்டவர் வாழைச்சேனை பாருக் நானா வீதியைச் சேர்ந்த 34 வயதுடையவர் எனவும் இவர் நீண்டகாலமாக கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்டு வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சந்தேகநபரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் மேலும் தெரிவித்தனர்.

- நிருபர் சரவணன்-

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.