ஒமிக்றோன் தொற்று - இலங்கையில் அச்சம்!!

 


ஒமிக்ரான் கொரோனா திரிபுடன் இலங்கையில் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது.

தென்னாபிரிக்காவிலிருந்து நாடு திரும்பிய இலங்கையர் ஒருவரே இவ்வாறு ஒமிக்ரான் திரிபுடன் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.     

இதேவேளை தென்னாபிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமிக்ரான் வைரஸானது பல நாடுகளில், பரவியுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் அறிவித்திருந்தது.

இதன் காரணமாக பலநாடுகள் கட்டுப்பாடுகளை அதிகரித்துள்ளதுடன், சர்வதேச போக்குவரத்தினையும்  முடக்க நடவடிக்கை எடுத்துவருவதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

இந்நிலையில் நேற்றையதினம் இந்தியாவில்  ஒமிக்ரான் தொற்றுடைய இருவர் கண்டறியப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் தற்போது இலங்கையிலும் அடையாளம் காணப்பட்டுள்ளமையானது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.