ஜனாதிபதி,பிரதமரிடம் மூத்த அமைச்சர்கள் வலியுறுத்தல்!!


நாட்டில் பின்னடைவைச் சந்தித்துள்ள பொருளாதாரத்தை கட்டியெழுப்பவேண்டுமாயின், உடனடியாக சர்வதேச நாணய நிதியத்திடம் செல்லுமாறு மூத்த அமைச்சர்கள் பலர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரிடம் வலியுறுத்தியுள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்திற்கு சென்றாலும் அவர்களின் நிபந்த னைகளை விவாதித்து கடனை பெறுவதில் தவறில்லையென்றும், இல்லையேல் பெரும் சீரழிவை நாடு சந்திக்கவேண்டிவருமென்றும் அரச தலைவர்களிடம் சுட்டிக் காட்டியுள்ளதாக சிரேஷ்ட அமைச்ச ரொருவர் நேற்றிரவு ‘தமிழன்’ செய்திகளிடம் தெரிவித்தார்.

நாட்டின் பொருளாதார நிலைமையை சரிசெய்ய சர்வதேச நாணய நிதியத்திடம் செல்லக் கூடாதென அரசுக்குள் ஏற்கனவே தீர்மானம் எடுக்கப்பட்டுள்ள நிலையில், சிரேஷ்ட அமைச்சர்கள் இவ்வாறு வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதேசமயம் சர்வதேச நாணய நிதியத்திடம் கடன்பெற செல்லக் கூடாதென்ற தீர்மானத்தை அரசு மீள்பரிசீலனைக்கு உட்படுத் தியுள்ளதாகவும் அறியமுடிந்தது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.