வவுனியாவில் பாழடையும் வீதி!

 வவுனியா பூந்தோட்டம் பெரியார்குளம் உள்வீதிகள் கனரக


வாகனங்கள் பயணிப்பதால் சேதமடைந்துவருவதுடன், போக்குவரத்து நெரிசலும் ஏற்படுவதாக கிராமமக்கள் தெரிவிக்கின்றனர்.

வவுனியா சாந்தசோலையில் இருந்து பூந்தோட்டம் பாடசாலை வரையான வீதி காப்பற் இட்டு புணரமைக்கும் பணிகள் இடம்பெற்று வருகின்றது.

குறித்த புணரமைப்பு பணிக்காக கொண்டுசெல்லப்படும் கிரவல்,மற்றும் ஏனைய பொருட்கள் கனரக வாகனங்களினூடாக பெரியார்குளம் மற்றும் பூந்தோட்டம் உள்வீதிகளூடாக கொண்டு செல்லப்படுகின்றது.

இதனால் சிறிய வீதிகளாக காணப்படும் அவை சேதமடைந்துவருவதுடன்,சில சமயங்களில் வாகன நெரிசலான நிலமை ஏற்படுவதாகவும் கிராம மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

வீதி அபிவிருத்திப்பணிகளை தாம் வரவேற்றப்பதாக தெரிவிக்கும் கிராமமக்கள் குறித்த வீதி புணரமைப்பு பணிகள் நிறைவுபெறும் போது பெரியார்குளம் உள் வீதிகள் குன்றும் குழியுமாக மாறிவிடும் என்று அவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

எனவே சிறுவீதிகளூடாக கனரக வாகனங்கள் பயணிப்பதை தவிர்த்து மாற்று ஏற்பாடுகளை செய்வதற்கு உரிய திணைக்களங்கள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என கிராமமக்கள் தெரிவிக்கின்றனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.