சடலமாக மீட்கப்பட்ட வலி.கிழக்கு பிரதேச சபை உறுப்பினர்!!

 


யாழ்ப்பாணம் வலி.கிழக்கு பிரதேச சபை உறுப்பினர், சாவகச்சேரி- தனங்களப்பு பகுதியிலுள்ள பண்ணை வீட்டில் இருந்து சடலமாக இன்று (புதன்கிழமை) கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

புத்தூர் வடக்கு, ஆவரங்கால் பகுதியை சேர்ந்த சுப்பிரமணியம் சிவபாலன் என்பவரே இவ்வாறு சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, ஆவரங்கால் பகுதியை சேர்ந்த குறித்த நபர், தனங்களப்பு- தென்னம் தோட்டம் ஒன்றினை பராமரித்து வருவதுடன், தோட்டத்துடன் இணைந்த வீட்டில் வசித்தும் வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த சில தினங்களாக அவரின் நடமாட்டத்தை அயலவர்கள் அவதானித்து இருந்த நிலையில், இன்றைய தினம் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதை அடுத்து வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, அவர் உயிரிழந்த நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

மேலும் இவர், சில தினங்களுக்கு முன்னரே உயிரிழந்திருக்கலாம்  என நம்பப்படுகிறது.

குறித்த சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.