அலம்பில் கடற்கரையில் கரையொதுங்கிய டொல்பின்கள்!
முல்லைத்தீவு - அலம்பில் கடற்கரையில் உயிரிழந்த நிலையில் ஒன்பது டொல்பின்கள் கரையொதுங்கியுள்ளதாக வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அலம்பில் கடற்கரையிலிருந்து சுமார் 2 கிலோமீற்றர் தூரத்துக்கு இந்த டொல்பின்களின் உடல்கள் சிதறிக் காணப்பட்டதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.
இறந்த மீன்கள் 2 முதல் 6 அடி நீளம் கொண்டவை என்றும் அவற்றின் உடல்களில் பிளாஸ்டிக் துண்டுகள் காணப்பட்டதாகவும் வனஜவராசிகள் அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலதிக விசாரணைக்காக உடற் பாகங்கள் அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka
கருத்துகள் இல்லை