தேசபக்தன் - கவிதை!!

 



யார் தேசபக்தன்?


மூன்று கோடியில்


முடிக்க வேண்டிய திட்டத்தை


முப்பது கோடியில் வெற்றிகரமாய்


முடித்த பொறியியலாளனா?


 


விவசாயத்தை நிறுத்திவிட்டு


அரிசியை இறக்குமதி செய்யும்


அரசியல்வாதியா?


 


பாடசாலையில் தூங்கி


தனியார் வகுப்புகளில் விழிக்கும்


ஆசிரியரா?


 


உண்மையில் இவர்களில்


யார் தேசபக்தன்?

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.