4 காவல்துறை அதிகாரிகளுக்கும் பதவி உயர்வு!!
அம்பாறை - திருக்கோவில் காவல் நிலையத்தில், காவல்துறை உத்தியோக்கத்தர் ஒருவரால் நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் பலியான 4 காவல்துறை அதிகாரிகளுக்கும் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
காவல்துறை மா அதிபரின் பணிப்புரைக்கு அமைவாக கடந்த 24ஆம் திகதியுடன் அமுலாகும் வகையில் அவர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
விடுமுறை வழங்கப்படாததன் காரணமாக ஏற்பட்ட பிரச்சினையில் நேற்று முன்தினம் காவல்துறை உத்தியோகத்தர் ஒருவரால் துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டிருந்தது.
குறித்த துப்பாக்கி பிரயோகத்திற்கு இலக்கான அம்பாறை - திருக்கோவில் காவல் நிலையத்தில் சேவையாற்றிய நான்கு காவற்துறை உத்தியோகத்தர்கள் பலியானமை குறிப்பிடத்தக்கது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka
கருத்துகள் இல்லை