வெற்றி, தோல்வியை தீர்மானிப்பது பெரமுனவின் நடத்தையே


அரசாங்கம் எதிர்காலத்தில் தோல்வியை சந்திக்குமா இல்லையா என்பது தொடர்பான தீர்மானம் பிரதான கட்சியின் நடத்தையிலேயே தங்கியுள்ளது. பங்காளிக் கட்சிகளை தக்கவைத்துக்கொள்ளும் தேவை அவர்களுக்கு இருக்குமாக இருந்தால் வார்த்தைகளை கட்டுப்படுத்திக்கொள்ள வேண்டுமென ஐக்கிய மக்கள் சுகந்திர கூட்டமைப்பின் பொதுச் செயலாளரும் சுற்றாடல் அமைச்சருமான மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளாா்.

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள உரப் பிரச்சினை, சீன உர கப்பலுக்கு கொடுப்பனவை செலுத்த வேண்டி ஏற்பட்டுள்ளமை மற்றும் உரத்தை நாட்டுக்கு கொண்டுவரும் போது ஊழல் மோசடி ஏற்பட்டுள்ளதா ஆகிய விடயங்கள் தொடர்பில் தேடிப்பார்ப்பதற்கு ஜனாதிபதி ஆணைக்குழுவொன்றை நியமிக்குமாறு ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளாா்.

உயர் நீதிமன்ற நீதியரசகர்கள், ஓய்வுப்பெற்ற நீதியரசர்கள் மற்றும் இதுதொடர்பில் நிபுணர்களின் பங்களிப்புடனான பூரண அதிகாரமுடைய குழுவொன்று இதுதொடர்பில நியமிக்கப்பட வேண்டும் என்று தெரிவித்த அமைச்சர், திரவ உர கேன்கள் வெடிப்புக்குள்ளாகும் சம்பவங்கள் தொடர்பில் விசாரித்து தவறிழைத்தவர்களுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளாா்.

சுற்றாடல் அமைச்சில் இன்று (16) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே இதனைக் குறிப்பிட்டுள்ளாா்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,

மீண்டும் தரமான உரத்தை பெற்றுக்கொடுக்கும் இணக்கப்பாட்டுக்கு அமையவே இந்த உர கப்பலுக்கு நிதி செலுத்தப்படுவதாக விவசாயத்துறை அமைச்சர் அமைச்சரவையில் தெரிவித்தாா். அவ்வாறு இடம்பெறாவிட்டால் இதற்கு பொறுப்புக் கூற வேண்டியவரிடமிருந்து அந்த நிதியை அறவிட வேண்டும்.

தற்போது எரிவாயு வெடிப்புச் சம்பவங்கள் காரணமாக அநேகமானவர்கள் அச்சமடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளாா்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.