குறிஞ்சாக்கேணி படகு விபத்தில் சிக்கிய மற்றுமொரு பெண் மரணம்!!

 


கிண்ணியா - குறிஞ்சாக்கேணி மிதப்பு பாலம் கவிழ்ந்த விபத்தில்மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கிண்ணியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட பெண் ஒருவரே இவ்வாறு மரணித்துள்ளார்.


கடந்த மாதம் 23ஆம் திகதி இடம்பெற்ற இந்த அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டிருந்த குறித்த பெண் கிளிநொச்சி வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்றிரவு மரணித்ததாக வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

இதற்கமைய, குறிஞ்சாக்கேணி மிதப்பு பாலம் கவிழ்ந்த விபத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 8 ஆக உயர்வடைந்துள்ளது.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka 




கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.