இறால் பண்ணை நீர்த் தொட்டிக்குள் விழுந்து குடும்பஸ்தர் உயிரிழப்பு!
புத்தளம் – ஆராச்சிக்கட்டுவப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆனைவிழுந்தான் பகுதியிலுள்ள இறால் பண்ணை நீர் தொட்டிக்குள் விழுந்து குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்தார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
முந்தல், பத்துளுஓயா – மகாமாலிய பகுதியைச் சேரந்த 51 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையே இன்று இவ்வாறு உயிரிழந்தார்.
ஆராச்சிக்கட்டுப் பிரதேச திடீர் மரண விசாரனை அதிகாரி சம்பவ இடத்தில் மரண விசாரணையை மேற்கொண்ட பின்னர், சடலத்தைப் பிரேத பரிசோதனைக்காக சிலாபம் பொது வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லுமாறு உத்தரவிட்டார்.
இந்தச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை ஆராச்சிக்கட்டுப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை