சீமெந்து தட்டுப்பாடு 25ஆம் திகதிக்குப் பின் குறையும் வாய்ப்பு!
நாட்டில் எதிர்வரும் 25ஆம் திகதிக்கு பிறகு சீமெந்து தட்டுப்பாடு குறைய வாய்ப்புள்ளதாக சிமெந்து இறக்குமதியாளர்கள் மற்றும் உள்ளூர் உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் 6 இலட்சம் சீமெந்து மூடைகளை ஏற்றிக்கொண்டு இரண்டு கப்பல்கள் நேற்று (19) நாட்டை வந்தடைந்ததாக அவர்கள் தெரிவித்தனர்.
அந்தவகையில் இந்தோனேசியாவிலிருந்து ஒரு கப்பல் 200,000 சீமெந்து மூட்டைகளை ஏற்றிக்கொண்டு வந்ததுடன் பாகிஸ் தானிலிருந்து 400,000 சீமெந்து மூடைகளை ஏற்றிக் கொண்டு மற்றொரு கப்பல் வந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த சீமெந்து மூடைகள் விரைவில் சந்தைக்கு விடப்படும் எனவும் சீமெந்து இறக்குமதியாளர்கள் மற்றும் உள்ளூர் உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தற்போது சந்தையில் சீமெந்து மூடை ஒன்றின் விலை 1375 ரூபாவாக காணப்படுகின்ற நிலையில் கட்டிடப் பொருட்களை விற்பனை செய்பவர்கள் சுமார் 1500 ரூபாவுக்கு சீமெந்தை விற்பனை செய்கின்றனர்.
அதேசமயம் சில விற்பனையாளர்கள் மணல் அல்லது கல் வாங்கும்போது மட்டுமே சீமெந்தை விற்பதாகவும் கூறப்படுகின்றது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka
கருத்துகள் இல்லை