அரச ஊழியர்களின் ஓய்வு வயதை 65 ஆக அதிகரித்து வர்த்தமானி வெளியீடு!
அரச ஊழியர்களின் ஓய்வூதிய வயதெல்லையை 65 ஆக அதிகரிக்கும் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
பொது சேவை, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சர் ஜனக்க பண்டார தென்னகோனின் கையொப்பத்துடன் இந்த அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளளது.
இம்முறை வரவு செலவுத் திட்டத்திற்கமைவாக அரசாங்க ஊழியர்களின் ஓய்வூதிய வயதை 65 ஆக நீடிப்பதற்கு அரசாங்கத்தினால் தீர்மானிக்கப்பட்டது.
இதற்கமைய, எந்தவொரு அரசாங்க ஊழியரும் 55 வயதிற்கு பின்னர் ஓய்வு பெற்று செல்ல முடியுமென்பதுடன், 65 வயது நிரம்பிய பின்னர் கட்டாய ஓய்வில் செல்ல வேண்டுமென புதிய வர்த்தமானி அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை