இலங்கையில் நைஜீரிய பிரஜைகள் இருவர் கைது!
செல்லுபடியாகும் விசா இன்றி இலங்கையில் தங்கியிருந்த நைஜீரியா பிரஜைகள் இருவரை மஹரகம நாவின்ன பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்கள் இருவரும் நேற்று மாலை குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதன்படி சந்தேக நபர்கள் இருவரையும் மேலதிக விசாரணைகளுக்காக மஹரகம பொலிஸ் நிலையத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர். சந்தேக நபர்கள் இன்று கங்கொடவில் நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
மஹரகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka
கருத்துகள் இல்லை