கொரோனா உயிரிழப்பு தொடர்பாக வெளியான அதிர்ச்சி தகவல்!


இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மேலும் 20 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தியுள்ளார்.

இவர்கள் அனைவரும் நேற்றைய தினம் (29-01-2022) சனிக்கிழமை உயிரிழந்தவர்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், இலங்கையில் Covid19 தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 15,420 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, நேற்று (29) உயிரிழந்தவர்களில் 30 வயதுக்கு கீழ் இரண்டு ஆண்களும் ஒரு பெண்ணும், 30 முதல் 59 வயதுக்கு இடைப்பட்ட 5 பேரும் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்ட 12 பேரும் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.