வாழ்க்கையின் புதிய தொடக்கத்தில் கிரிக்கெட் வீரர் அக்சர் படேல்!


இந்திய கிரிக்கெட் அணி வீரர் அக்சர் படேலுக்கு  அவரது காதலியுடன்   , நிச்சயதார்த்தம் முடிந்துள்ள நிலையில், அது தொடர்பான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையே, டெஸ்ட் தொடர் முடிவடைந்ததை அடுத்து, தற்போது ஒரு நாள் தொடர் நடைபெற்று வருகிறது. இதன் முதல் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி வெற்றி பெற்றிருந்த நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது போட்டி தற்போது நடைபெற்று வருகிறது.

இதனிடையே, காயம் காரணமாக தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான தொடரில், இடம்பெறாமல் போன இந்திய வீரர் அக்சர் படேல், தன்னுடைய பிறந்தநாள் தினத்தில் அனைவருக்கும் அசத்தல் சர்ப்ரைஸ் ஒன்றைக் கொடுத்துள்ளார்.

அதாவது நேற்று அவர் தனது 28 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடியிருந்தார் அக்சர் படேல். இதற்கு மத்தியில், அவரின் காதலியான மேகாவுடன் நிச்சயதார்த்தமும் நடந்துள்ளது. இது தொடர்பான புகைப்படங்களை, அவரது நண்பரும், குஜராத் கிரிக்கெட் அணியில் அக்சர் படேலுடன் இணைந்து ஆடிய சின்தான் கஜா என்பவர், புகைப்படங்களை பகிர்ந்து, வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து, தன்னுடைய நிச்சயதார்த்தம் தொடர்பான புகைப்படங்களை அக்சர் படேலும் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில்,   'நமது வாழ்க்கையின் புதிய தொடக்கம். வாழ்நாள் முழுவதும் ஒன்றாக இருப்போம். முடிவற்ற காலம் வரை உன்னை காதலிப்பேன்' என  குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் ரசிகர்கள் வாழ்த்துதன்னுடைய பிறந்தநாள் தினத்திலேயே, காதலியுடன் நிச்சயம் செய்து கொண்ட அக்சர் படேலுக்கு, இந்திய அணி வீரர்கள் மற்றும் அவரது ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

அதேவேளை தென்னாப்பிரிக்க தொடருக்கு பிறகு, இந்திய அணி இலங்கை அணிக்கு எதிராக கிரிக்கெட் போட்டிகளை ஆடவுள்ளது. இந்த தொடரிலும், அக்சர் படேல் பங்கேற்க மாட்டார் என கூறப்படுகிகிறது.



 

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka 







கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.