நீர்வீழ்ச்சியில் நீராட சென்ற இளம் தமிழ் பெண்கள் உயிரிழப்பு!
உமா ஓயா – கெரண்டி எல்ல நீர்வீழ்ச்சியில் நீராட சென்றவர்கள் நீரில் மூழ்கிய நிலையில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளதாக சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதேவேளை தற்போது, மூழ்கி உயிரிழந்தவர்கள் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில், அட்டம்பிட்டிய பகுதியை சேர்ந்த 20 வயதான சஷிபிரியா, 21 வயதான திரிஷா 19 வயதான டேவிட் சஞ்சு ஹற்றன் பகுதியை சேர்ந்த 24 வயதான பவானி, 23 வயதான டேவிட் குமார் என்பவர்களே இவ்வாறு உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், 11 பேர் நீராட சென்றுள்ளதுடன் அவர்களில் 5 பேர் நீரில் இழுத்துச் செல்லப்பட்ட நிலையில் காணாமல் போயிருந்தனர். மீட்பு படையினரின் தீவிர தேடுதலை அடுத்து ஐந்து பேர் சடலமாக மீட்கப்பட்டிருந்தாக தெரியவந்துள்ளது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
.jpeg
)





கருத்துகள் இல்லை