எரிவாயு சிலிண்டர்களை வழங்க மறுக்கும் விநியோகஸ்தர்கள்!


எரிவாயு சிலிண்டர்களை மறைத்து வைத்து வழங்க மறுக்கும் விநியோகஸ்தர்கள் தொடர்பில் நுகர்வோர் அதிகார சபை தலையீட்டு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

நுவரெலியாவில் லிட்ரோ எரிவாயு விநியோகஸ்தர் ஒருவரால் மறைத்து வைக்கப்பட்டிருந்த எரிவாயு சிலிண்டர்கள் நுவரெலியா நுகர்வோர் அதிகாரசபையின் தலையீட்டின் ஊடாக நேற்று மீட்கப்பட்டு வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டது. லிட்ரோ நிறுவனம் நேற்று நுவரெலியாவில் உள்ள லிட்ரோ எரிவாயு விநியோகஸ்தர் ஒருவருக்கு தோராயமாக 50 எரிவாயு சிலிண்டர்களை வழங்கியது.

ஆனால், வரிசையில் காத்திருந்த வாடிக்கையாளர்களுக்கு காஸ் சிலிண்டர் வழங்க மறுத்ததால், சில வாடிக்கையாளர்கள் வலுக்கட்டாயமாக டீலரின் கடைக்குள் நுழைந்து சிலிண்டர்களை வாங்கிச் சென்றனர்.

இதற்கிடையில் வரிசையில் காத்திருந்த சிலர், விநியோகஸ்தர்களால் எரிவாயு சிலிண்டர்கள் வழங்கப்படாதது குறித்து நுவரெலியா நுகர்வோர் அதிகாரசபை அலுவலகத்தில் முறைப்பாடு செய்ததையடுத்து, அதிகாரிகள் வந்து சிலிண்டர்களை மீட்டு விநியோகம் செய்தனர்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.