ஜனாதிபதி தலதா மாளிகை சென்றார்!


ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, வரலாற்றுச் சிறப்புமிக்க கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் இன்று முற்பகல் மத அனுஷ்டானங்களில் ஈடுபட்டுடுள்ளார். ஸ்ரீ தலதா மாளிகைக்குச் சென்ற ஜனாதிபதி, தியவடன நிலமே நிலங்க தேல வரவேற்றார்.

இந்நிலையில் தலதா மாளிகைக்கு வழிபாட்டுக்காக வருகை தந்திருந்த பொதுமக்களும், ஜனாதிபதிக்கு அமோக வரவேற்பளித்தனர். இதன்போது அங்கிருந்த மக்களுடன் சுமூகமாகக் கலந்துரையாடிய ஜனாதிபதி, அவர்களின் நலன் விசாரித்தறிந்து கொண்டார்.

மேலும் இந்நிகழ்வில் மத்திய மாகாண ஆளுநர் லலித் யூ. கமகே, இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம மற்றும் புத்தசாசன அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில குணவர்தன ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.