விரைவில் யாழ். பலாலி விமான நிலையம் திறக்கப்படும் – அரசாங்கம்!!


 நாட்டில் ஏற்பட்ட கொரோனா நெருக்கடி காரணமாகவே யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் மூடப்பட்டுள்ளதே தவிர வேறெந்த அரசியல் நோக்கங்களும் இல்லை என வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

எனவே, விரைவில் பலாலி விமான நிலையம் திறக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் நாட்டில் ஏற்பட்ட கொரோனா சூழ்நிலை காரணமாக இலங்கையில் உள்ள அனைத்து விமான நிலையங்களும் மூடப்பட்டிருந்தன என்றும் அதேபோல யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையமும் மூடப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.

தற்பொழுது ஏனைய சில விமான நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன அதேபோல பலாலி விமான நிலையமும் திறக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தற்போது பலாலி விமான நிலையத்தில் சில திருத்த வேலைகள் செய்ய வேண்டியுள்ளதாக தெரிவித்துள்ள அமைச்சர், குறிப்பாக ஓடுபாதை விரிவுபடுத்த வேண்டியுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்தோடு, பல விமான சேவைகளுக்கான அபிவிருத்தி செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டியதன் காரணமாக சற்று தாமதநிலை காணப்படுகின்றபோதும் அந்த வேலைகள் முடிந்த பின்னர் விரைவாக பலாலி விமான நிலையம் திறக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka 


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.